நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் காந்தி சிலை எதிரே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்லா தலைமை வகித்தார்.

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மன அழுத்தம் மற்றும் தோல்வி பயம்  காரணமாக, தங்களது இன்னுயிரைப் போக்கி கொண்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: