சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்டு 5ம் தேதி சென்னை சூளைமேடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்று வந்தது. தொடர்ந்து 45 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று எஸ்.பி.பி உணவு சாப்பிட்டதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
எனது தந்தை எஸ்.பி.பி உடல்நிலை சீராக இருக்கிறது.