சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மேலக்கிடாரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (13, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடலாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் விடுமுறையில் இருக்கும் கார்த்திக், தனது தந்தையின் மொபைல் போனில் ‘ப்ரீ ஃபையர்’ எனும் கேமை ஆன்லைன் மூலம் விளையாடி வந்தார். கேம் அப்டேட் கேட்கும் நேரத்தில், தனது தாயின் ஏடிஎம் கார்டின் யுபிஐ நம்பரை பதிவு செய்துள்ளார். இவ்வாறு பலமுறை செய்ததால் அவரது தாயின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் வரை பணம் பறிபோனது. இதனிடையே இவரது பெற்றோர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றனர்.