ராணி மேரி கல்லூரியில் வாலிபர் மர்ம சாவு

சென்னை: ராணி மேரி கல்லூரி வளாகத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெரினா காமராஜர் சாலையில் ராணி மேரி மகளிர் கல்லூரி உள்ளது. கொரோனா தடுப்பு காரணமாக கல்லூரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை காமராஜர் சாலையில் மக்கள் நடைபயிற்சி ேமற்கொண்டபோது, கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இதுபற்றி மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கிய வாலிபர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து தூக்கில் தொங்கிய வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, இந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொடங்க விட்டார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: