மும்பை : கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகளை மீண்டும் தொடங்க புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்டிராஜெனீகா என்ற வெளிநாட்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதே தடுப்பூசி மருந்தை தன்னார்வலர்களுக்கு கொடுத்து புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனமும் பரிசோதனை செய்து வந்தது.