மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வாகனங்களை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அதிகளவில் வனவிலங்குகள் உயிர் வாழ்கின்றன. அங்கு வாழும் யானை காட்டுமாடு, புலி, கரடி, சிறுத்தை, மான் போன்ற வன உயிரினங்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் 3 காட்டு யானைகள் அந்த சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்றன.