சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கவேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பணம், மற்றும் எந்த பணப்பலன்களும் கிடைக்காமல் தன்குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கும், திருமணம் நடத்துவதற்கும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக அவர்களுடைய பணத்தை அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். நீதிமன்றம் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும் கொடுக்காதது ஏன்?.