புதுடெல்லி: இந்தி தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய கலாச்சாரத்தில் இந்தி தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதில்தான் இந்தியாவின் வலிமையே அடங்கியிருக்கிறது. ஆனாலும், நம்மை பல நூற்றாண்டுகளாக ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பதாக இந்தி இருக்கிறது.பல்வேறு மொழிகள் பேசும் நம் நாட்டில் புதிய கல்விக்கொள்கை சிறப்பான மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. மாநில மொழிகளுடன், இந்தியும் சேர்ந்தே வளர்ச்சி அடையும்.