திருவள்ளூர்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையர் சந்தானம் மேற்பார்வையில் துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் மற்றும் வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நித்தி நிர்மலா குழுவினர் சோதனை செய்தனர். அப்போது, பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 16 பேரிடம் ரூ.3 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர். மேலும், 62 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவர்களுக்கு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக முகக்கவசம் வழங்கினர்.