டெல்லி: மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவு உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கையானது ஏழை மக்கள் மீதான தாக்குதலாகும், கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர் என்று அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார். இந்நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனாவுக்கு எதிரான போரை சரியாக திட்டமிடாமல் நடத்துவதால் இந்தியா படுகுழியில் விழுந்துள்ளது.