மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மதுரை வடக்குமாசி வீதியில் ஒரு பழக்கடை அருகே வாய்க்கால் தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு கல்வெட்டு ஒன்று புதைந்திருந்தது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் உள்ளிட்டோர் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறுகையில், ‘‘கல்வெட்டின் சிறு துண்டுதான் கிடைத்துள்ளது. இதுவும் தலைகீழாக கிடக்கிறது. 13ம் நூற்றாண்டு குலசேகர பாண்டியன் காலத்து கல்வெட்டாகும். இடையிடையே பல்வேறு எழுத்துகள் அழிந்துள்ளன.