பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் கோழிப்பண்ணையின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டதில் ரூ10 லட்சம் சேதமானதால் வருவாய்த்துறை நேரில் விசாரணை மேற்கொண்டனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் தேன்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட சற்று அதிகமாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் மேற்கு, வடக்கு எல்லையிலுள்ள பச்சைமலை மேலுள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் வேப்பூர் சுற்று வட்டாரப் பகுதி வயல்களில் தண் ணீர் தேங்கிக் கிடந்தது. அதேபோல் நேற்று முன்தினம் 8ம் தேதி வேப்பந்தட்டை தாலுகாவில் பலத்த மழை சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்துள்ளது.இதன்படி செட்டிக்குளம் 9மிமீ, அகரம்சீகூர் 10மிமீ, லெப்பைக்குடிகாடு 20மிமீ, புதுவேட்டக்குடி, எறையூர் ஆகியப் பகுதிகளில் தலா 3மிமீ, வி.களத்தூர் 23மிமீ, வேப்பந்தட்டை 53மிமீ என பெரம்பலூர் மாவட்ட அள வில் 121மிமீ மழை பெய்துள்ளது.