குளத்தூர்: குளத்தூர் அருகே 19 வயது வாலிபருடன் ஓட்டம் பிடித்த 25 வயது கல்லூரி மாணவியை போலீசார் மீட்டனர். வாலிபருக்கு திருமண வயது வந்ததும் முறைப்படி திருமணம் முடித்து வைப்பதாக காவல் நிலையத்தில் பெற்றோர்கள் சமரசம் செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவி. ராமநாதபுரத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்து வந்தார். அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த உறவினர் மகனான 19 வயது வாலிபர் மாணவி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். சிறியவன்தானே என இதனை மாணவியின் வீட்டிலும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் வயது வித்தியாசம் இன்றி அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. உறவினர் மகன் என்றாலும் இருவருக்குமிடையே உள்ள வயது வித்தியாசத்தால் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்து கடந்த வாரம் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி மற்றொரு உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.