திருமலை: ‘திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தில் பங்கேற்க ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்,’ என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆண்டு பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத் ஆலோசனை நடத்தினார். இதில், அவர் பேசியதாவது: இந்த ஆண்டு நடைபெறும் பிரமோற்சவத்தில், வரலாற்றில் முதன்முறையாக சுவாமி மாடவீதி உலா வைபவம் இல்லாமல் நடைபெற உள்ளது. கொரோனா பரவலை தடுக்க திருப்பதியில் வழங்கிய இலவச தரிசன டிக்கெட்டுகள், கடந்த வாரம் முதல் ரத்து செய்யப்பட்டது.