சென்னை: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்திருந்த நிலையில் அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற்ம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்தது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். அதற்கு ஊதியமாக 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பெறப்பட்டது. இந்த தொகையை தன்னுடைய ஏ.ஆர்.ஆர். அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்தி வரி ஏய்ப்பு செய்ததாக ஏ.ஆர். ரஹ்மான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ரஹ்மான் முயற்சித்ததாக கூறி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விசாரணையின் போது ரஹ்மான் தரப்பு தனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு விசாரணையை கைவிட்டதாக ஏற்கனவே முதன்மை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.