சென்னை: கடலூர் மாவட்டத்தில் வி.ஏ.ஓ மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கா விட்டால், மாவட்ட ஆட்சியரின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவரது தந்தை கிராம உதவியாளராக பணியாற்றி 2003ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு ரவி கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், தமிழக அரசு சில அரசு பணிகளுக்கு 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை 2007ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி நீக்கப்பட்டு, கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கியது.