சேற்றில் சிக்கி வாலிபர் பலி

செய்யூர்: சென்னை அம்பத்தூர்,  கருக்கு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (20). தனியார் கம்பெனி ஊழியர். விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் கணேஷ், செய்யூர் அடுத்த நீலமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.‘இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கணேஷ், நண்பர்களுடன் கிளி ஆற்றில் குளித்தார்.அப்போது, அவர் சேற்றில் சிக்கி மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள், உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே கணேஷ் பரிதாபமாக இறந்தார்.

Related Stories: