வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தில் ஆசிரியர் தின விழா

திருவள்ளூர்: முகப்பேர், வேலம்மாள் நெக்சஸ் சார்பில் ஆசிரியர் தினத்தை மெய்நிகர் விழாவாகக் கொண்டாடியது. விழாவில், நெக்சஸ் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதான நன்றியையும், பாராட்டையும் மாணவர்கள் நெகிழ்ந்து கூறியது ஆசிரியர்களுக்கான  மிகப்பெரிய கவுரவமாக அமைந்தது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மாறுபட்ட கற்பித்தல் முறைக்குத் தள்ளப்பட்டு இருந்தாலும், தங்களைத் தாங்களே மெருகேற்றிக் கொண்டு மாற்றங்களைத் தழுவுவதில் முன்னணியில் இருந்த ஒவ்வொரு ஆசிரியருக்கும் நிர்வாகம் தனது மணப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தது.

மெய்நிகர் ஆசிரியர் தின விழாவில் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் துணைத் தலைவர், மயில்சுவாமி அண்ணாதுரை, நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி, நெக்சஸ் குழுவின் மூத்த முதல்வர் ஜெயந்தி ராஜகோபாலன், முதல்வர் ஷியாமலா சுப்புவின் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

Related Stories: