திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு யானை ஒன்று வாயில் பலத்த காயத்துடன் காணப்பட்டது. வலி பொறுக்க முடியாமல் தண்ணீரில் இறங்கி நின்ற அந்த யானை, கும்கி யானைகள் மூலம் மீட்கப்பட்டது. ஆனால், சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக அது பரிதாபமாக இறந்தது. இது, தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. காட்டுப் பன்றிக்கு அன்னாசி பழத்தில் வைத்த வெடிகுண்டை சாப்பிட்டபோது, அந்த குண்டு வெடித்து யானை காயம் அடைந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.