சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக இருந்த பணீந்திர ரெட்டி ஜூன் 18ம் தேதி வருவாய் நிர்வாக ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, அவரிடம் அறநிலையத்துறை கமிஷனர் பொறுப்பை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த பிரபாகரை அறநிலையத்துறை கமிஷனராக நியமனம் செய்து கடந்த 29ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அவர் கமிஷனராக உடனடியாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக கோப்புகளை சரிபார்க்க வேண்டியிருந்ததால், அவர் பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டது.