ஆவடி: கொரட்டூர் சீனிவாசா நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜானகிராமன் (60). காவலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் கிணற்றின் மீது உட்கார்ந்திருந்தார். அப்போது, கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முதியவரை சடலமாக மீட்டனர்.