பொன்னேரி: பழவேற்காட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைபொருட்கள் விற்பதாக மாவட்ட எஸ்பி அரவிந்தனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்பேரில், திருப்பாலைவனம் போலீசார் நேற்று ஆண்டார்மடம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்தனர்.