பழநி: பழநி பகுதியில் தொடர்மழையால் நிரம்பி வழியும் அணைகளில் செல்பி எடுக்க குவியும் பொதுமக்களால் அபாயம் நிலவுகிறது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி பாலாறு- பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 44.88 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 265 கனஅடி நீர் வருகிறது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 34 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 80 அடி உயரம் உள்ள 56.35 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 கனஅடி நீர் வருகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 7 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 66-.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணை முழுவதும் நிரம்பி விட்டது.