ஆவடி: ஆவடி காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காளிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் கடந்த 5 மாதமாக ஊரடங்கில் தீவிரமாக பணியாற்றி வந்தனர். இதனால், இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இருவருக்கும் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் காளிராஜ் ராயபுரத்தில் உள்ள தனது வீட்டிலும், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆவடி அருகே வெள்ளானூரில் உள்ள உள்ள அவரது வீட்டிலும் தனிமைபடுத்திக் கொண்டனர்.