திருமலை: ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் வரும் 21ம் தேதி முதல் பள்ளிகள், திறந்தவெளி தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து ஆந்திர மாநில அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘வரும் 21ம் தேதி முதல் 9, 10 மற்றும் இன்டர்மீடியட் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.