காணொலிக் காட்சி மூலம் வரும் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: மாவட்ட செயலாளர்கள் தா.மோ.அன்பரசன், க.சுந்தர் அழைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் வரும் செப்.9, புதன்கிழமை காலை 10 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது, எனவே. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட திமுக நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், அணிகளின் மாநில மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி நெடுஞ்சாலையில் உள்ள என்.பி.ஆர் திருமண மண்டப அரங்கில் காலை 8.30 மணியளவில் வருகை தந்து பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

எனவே. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட திமுக நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், கழக அணிகளின் மாநில மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகம், காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் வரும் 9ம் தேதி காலை 9 மணியளவில் வருகை தந்து பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: