மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 23,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 9,07,212 ஆக உயர்வு

மும்பை: மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 23,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மராட்டியம் தான் உள்ளது. இந்நிலையில், இன்று மராட்டியத்தில் புதிய உச்சமாக மேலும் 23,350 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,07,212 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 328 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,604 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 7,826 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,44,400 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 2,35,857 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: