சென்னை: செப்.30 வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்காத காலங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து வருகிற 7-ம் தேதி முதல் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சாலை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தால் மட்டுமே ஆம்னி பஸ்களை இயக்க தயாராக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 1,184 அரசு விரைவு பஸ்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் வருகிற 7-ம் தேதி முதல் இயக்கப்பட இருக்கின்றன. இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.