திருமயம்: அரிமளம் அருகே தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது ஊரணியை மீட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் 2.5 ஏக்கர் அளவுள்ள ஊரணி உள்ளது. இதை அப்பகுதி மக்கள் உப்பு ஊரணி என்று அழைப்பர். இது மழை காலத்தில் மழைநீர் சேகரிக்கவும், கோடை காலத்தில் விவசாயத்துக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும்போது இதிலிருந்து ஒரு குறிப்பிட அளவு விவசாயத்துக்கு போதுமான நீரை எடுத்து அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்துவது வழக்கம்.