சென்னை: கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளர்வுகள் இருந்தாலும் நோய் பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டமான இடத்தில் தனிமனித இடைவெளி அவசியம். முதியவர்கள் இருந்தால் தள்ளி இருக்க வேண்டும். பணி செய்யும் இடத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 40% மக்கள் முகக்கவசம் பயன்படுத்துவதில்லை எனத் தெரிகிறது. கொரோனா குறித்தான அச்சத்தை மக்கள் உணர வேண்டும். பேருந்து படியில் பயணிக்க வேண்டாம். பேருந்து நிலையம், கோயில் போன்ற இடத்தில் கட்டாயம் தனிமனித இடைவெளி மிக மிக அவசியம். பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.