சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் வெளிமாநில மாணவர்கள் பி.இ , பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலை வெளியிட்ட அறிக்கை: 2020-21 கல்வியாண்டிற்கான பி.இ / பி.டெக் / பி.ஆர்க் மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கு, வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் வெளிமாநில மாணவர்கள் அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.