சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் 4ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. கொரோனா தடுப்புப் பணி, தளர்வுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்யவுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு இருந்ததால் கடந்த 5 மாதங்களாக பஸ்கள் ஓடவில்லை. நேற்று முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.