காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டி.டி.நகர் பகுதியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 6ம் வகுப்பில் 200 மாணவர்கள் மட்டுமே சேர்க்க முடியும் என்ற நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி அட்மிஷன் துவங்கிய முதல்நாளே 700 பேர் குவிந்தனர். கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால் 200 மாணவர்களை மட்டும் சேர்த்து விட்டு 500 பேரை இடம் இல்லை என திருப்பி அனுப்பினர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது.