சென்னை: அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2018ல் சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில், சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி உட்பட 4 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகளும், மற்ற 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.