தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் தொடர்ச்சியாக பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் அவமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து பொன்னேரியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பட்டியலின தலைவர்கள் தொடர்ச்சியாக அவமதிப்பு செய்யப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது, பல ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்களை செயல்பட விடாமல், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரவிடாமல், காசோலைகளில் கையெழுத்து மட்டும் வாங்கும் சம்பவங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. எனவே, அரசியலமைப்பு சட்டத்தின்படி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அதிகாரங்களை பெற்று அவர்கள் சுயமாக பணியாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், பட்டியலின ஊராட்சி தலைவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.

Related Stories: