திருவள்ளூர்: கடம்பத்தூர் அடுத்த கொண்டஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். தண்ணீர் கேன் விநியோகிக்கும் வேலை செய்கிறார். கடந்த வாரம் சாலை ஓரத்தில் தனது பைக்கை நிறுத்தி விட்டு தண்ணீர் கேன் விநியோகம் செய்தார். அப்போது, கார் ஒன்று சுபாஷின் பைக் மீது மோதியது. இதை சுபாஷ் தட்டிக்கேட்டார். இதனால் சுபாஷை, காரில் இருந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுபாஷ் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.