உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள்கள் நித்யஸ்ரீ(18), சுபஸ்ரீ(17), காவியஸ்ரீ(16). நித்யஸ்ரீ திருச்சியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சுபஸ்ரீ முதலாம் ஆண்டும், காவியாஸ்ரீ 11ம் வகுப்பும் படிக்கின்றனர். 3 மாணவிகளும் ஆன்லைன் வகுப்பில் கல்வி பயில செல்போன் தேவைப்பட்ட நிலையில் ஆறுமுகம் ஒரு செல்போன் வாங்கி கொடுத்து மூன்று பேரையும் படித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.