ஆவடி: ஆவடியில் அளவுக்கு அதிகமாக குடித்த எலக்ட்ரீசியன் நாக்கு வறண்டு பலியானார். ஆவடி, பாரதிதாசன் நகர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (24). எலக்ட்ரீசியன். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி ரேவதி (22). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. பிரகாஷ், தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு குடித்துவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரகாஷ் வேலை முடிந்து அளவுக்கு அதிமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர், அவர் வீட்டில் போதையில் தூங்கினார். அவரை மனைவி ரேவதி சாப்பிட எழுப்பினார்.