சென்னை: செங்குன்றம் காந்தி நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுகன்யா (20). இவருக்கு பெற்றோர் இல்லை. தனது அத்தை சுரேகா வீட்டில் வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சுகன்யாவுக்கு கோயம்புத்தூரில் உள்ள ரமேஷ்குமார் என்பவருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு வரும் 4ம் தேதி கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சுகன்யா தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியை முகநூலில் தொடர்பு கொண்டு, தனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியுமா எனவும் கேட்டுள்ளார். அதற்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி என்னை எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்டுள்ளார்.