கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கனிமவளத்துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 387 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, விதிகளுக்கு முரணாக இயங்கிய 15 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அலுவலர்களை கொண்ட சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி அனுமதிச்சீட்டு இன்றி, கனிமவளங்களை கடத்தும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.