சென்னை: அறநிலையத் துறைக்கு புதிய கமிஷனராக பிரபாகர் என்பவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறையில் கமிஷனராக பணீந்திர ரெட்டியை 2018 டிசம்பர் 29ம் தேதி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவர் காலத்தில் தான் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன. மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நகை, சிலைகளின் விவரங்களை ஆவணங்களை பதிவு செய்யவும், அவற்றை இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதே நேரத்தில் கோயில் நிர்வாக பணிகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கமிஷனர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில், கமிஷனர் பணீந்திர ரெட்டி கடந்த ஜூன் 18ம் தேதி வருவாய்த்துறை நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.