மணப்பாறை: பல வருஷமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க...கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்தியானந்தா எங்க...என்று நித்தியானந்தா படத்துடன் திருமண விழாவில் வாலிபர்களால் வைக்கப்பட்ட விளம்பர பேனர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேலமஞ்சம்பட்டியில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமணம் நடந்த மண்டப வளாகத்தில் மணமகனின் நண்பர்கள் சார்பில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவை புகழ்ந்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரில் ‘‘பல வருஷமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க.. கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்தியானந்தா எங்க...’’ என்று வாசகங்களுடன் அருகிலேயே மணமக்களை வாழ்த்துவதை போலவே நித்தியானந்தா படமும் இருந்தது.