கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவு- ப.சிதம்பரம், கமல் ஆகியோர் இரங்கல்

சென்னை: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துளார். ஆர்வமும், துடிப்பும், சிரிப்பும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பண்பும் அவருக்கே உரித்தான குணநலன்கள் என்று சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கள் தெரிவித்துள்ளார். நடுத்தர குடும்பங்களின் வலியறிந்து வியாபாரத்தை வளர்த்தவர் வசந்தகுமார் என்று கமல் தெரிவித்துள்ளார்.  தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றி இருந்தோரையும் முன்னேற்றியவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: