கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சியாக தான் இருக்கும் : குலாம் நபி ஆசாத்

டெல்லி : கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி இருக்கையில்தான் அமரும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கட்சியின் அகில இந்திய தலைவா், மாவட்ட தலைவா்கள், மண்டல தலைவா்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரும் தோ்தல் மூலமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைத்தான் கடிதத்தில் வலியுறுத்தினோம். காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர்கள் நாங்கள் எழுதிய கடிதத்தை வரவேற்பார்கள், என்றார்.

Related Stories: