பூந்தமல்லி: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை, பூந்தமல்லி அருகே தனியாருக்கு சொந்தமான காயலான் கடை உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வயர்கள், அட்டைகள், பழைய பொருட்களை தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலயில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் இந்த கடையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. தீயானது கடை முழுவதும் பரவ ஆரம்பித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.