14 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக வெப்ப சலனத்தால் மழை பெய்கிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான மெல்லிய காற்றழுத்தம் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா கடற்கரையில் மழை பெய்கிறது. தமிழகத்தில் நிலவும் வெப்பம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.

Related Stories: