உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி காலமானார்

சென்னை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காரைக்குடியில் நேற்று காலமானார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி ஆச்சி(76). இவர் கடந்த சில நாட்களாக சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் வசித்து வந்தார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காரைக்குடியில் மரணமடைந்தார். அவரது உடல் தேவக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடந்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், சட்டக்கமிஷன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஏ.ஆர்.லட்சுமணன், மீனாட்சி ஆச்சி தம்பதிக்கு ஏ.ஆர்.அருணாச்சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என்ற இரு மகன்களும், உமையாள், சொர்ணவள்ளி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அதில், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வக்கீலாகவும், சென்னை பார் அசோசியேசன் தலைவராகவும் உள்ளார்.

Related Stories: