கான்பூர், -உத்தரபிரதேசத்தில் கீழே கிடந்த பொருளை பன்றி சாப்பிட்ட போது, அந்த பொருள் வெடித்ததில் பன்றி பலியானது. மேலும் குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பாபு பூர்வா காவல் நிலைய பகுதியில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்தை அடைந்த போலீசார் மற்றும் எப்.எஸ்.எல் பிரிவு குழுவினர், நேற்றிரவு முதலல் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட வீட்டிற்கு வெளியே கிடந்த பொருளை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த பன்றி சாப்பிட முயன்றுள்ளது. அப்போது அந்த பொருள் வெடித்து சிதறியது. இதில், பன்றி சம்பவ இடத்திலேயே பலியானது.