மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

பெரியகுளம்:  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானலில் கனமழை பெய்தால் நீர்வரத்து இருக்கும். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் அருவிக்கு வந்து குளித்து மகிழ்வர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிக்கு அருகில் உள்ள மாந்தோப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: