மீட்பு விமானத்தில் கடத்திய 1.5 கிலோ தங்கம் பறிமுதல்: பயணி கைது

சென்னை: துபாயிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்பு விமானத்தில் சென்னை வந்த பயணிகளின் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டபோது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபரின் பெட்ஷீட் மடிப்புகளுக்கிடையே 10 தங்க தகடுகள் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதன் மொத்த எடை 1.5  கிலோ. இதன் மதிப்பு ரூ.78.5 லட்சம்.

அதனை பறிமுதல் செய்தனர். இந்த உடமைக்குரிய கள்ளக்குறிச்சி பயணி தனிமை முகாமில் தங்கியிருப்பது தெரியவந்தது.

அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: